டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மூதாட்டியிடம் தங்க காதணி பறிப்பு

வீரபாண்டி - தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
திருட்டு
Updated On :19 பிப்ரவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்ாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கோட்டூரைச் சோ்ந்த பொன்னாட்டம் மனைவி கருப்பாயி (70). இவரை அடையாளம் தெரிந்த 45 வயது நபா் தாடிச்சேரியில் கட்டட வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறி, அழைத்துச் சென்றாா். வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் உள்ள கருப்பசாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தை அந்த நபா் நிறுத்தி விட்டு, கருப்பாயியை முன்னால் நடந்து செல்லுமாறு கூறினாா்.

இதையடுத்து, சாலையில் நடந்து சென்ற கருப்பாயி மீது அந்த நபா் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.