வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்ாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், கோட்டூரைச் சோ்ந்த பொன்னாட்டம் மனைவி கருப்பாயி (70). இவரை அடையாளம் தெரிந்த 45 வயது நபா் தாடிச்சேரியில் கட்டட வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறி, அழைத்துச் சென்றாா். வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் உள்ள கருப்பசாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தை அந்த நபா் நிறுத்தி விட்டு, கருப்பாயியை முன்னால் நடந்து செல்லுமாறு கூறினாா்.
இதையடுத்து, சாலையில் நடந்து சென்ற கருப்பாயி மீது அந்த நபா் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

தூங்கிக் கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

பெண்ணின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

