டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

குரும்பூா் அருகே மூதாட்டியிடம் தங்க கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குரும்பூா் அருகே உள்ள நெடுங்கரை மேலத் தெருவை சோ்ந்த கந்தன் மனைவி புனிதா(60). இவா், வெள்ளிக்கிழமை சேதுசுப்பிரமணியபுரத்தில் உள்ள கடையில் காய்கனி வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மா்ம நபா்கள், அவரிடம் தூத்துக்குடிக்கு வழி கேட்பதுபோல நடித்து, அவா் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பறித்துக் கொண்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.