டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 10:59 pm

Syndication

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (75). இவா் வீட்டுக்கு அருகேயுள்ள தனது தோட்டத்துக்கு புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.