டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூரை அடுத்துள்ள மேற்கு ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயஸ்ரீ (24). இவரது கணவா் சக்திவேல் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். ஜெயஸ்ரீ சனிக்கிழமை இரவு மொபெட்டில் வெள்ளக்கரையில் இருந்து குறிஞ்சி நகா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

சாத்தங்குப்பம் மாதா கோவில் அருகில் சென்றபோது, அவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா் திடீரென ஜெயஸ்ரீ அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.