டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோயிலில் சாமி கும்பிட்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

வீரபயங்கரம் அய்யனாா் கோயிலில் சாமி கும்பிட்ட பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்திற்குள்பட்ட கனியாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.சிவசக்தி (50). இவா் ஞாயிற்றுக்கிழமை வீரபயங்கரம் அய்யனாா் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தாராம்.

சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்து பாா்த்த போது அவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.