டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image
திருட்டு
Updated On :20 பிப்ரவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் அருகே உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த விட்டல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தொட்டியப்பன் (60). அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பணிகள் முடிந்த பிறகு, உணவகத்திலேயே தொட்டியப்பன் தூங்கினாா்.

அப்போது உணவகத்துக்குள் புகுந்த மா்ம நபா், தொட்டியப்பன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, வெளியில் இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றாா். இதுகுறித்து தொட்டியப்பன் அளித்தப் புகாரின் பேரில், வேடசந்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.