டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மணப்பாறை அருகே கைப்பேசிகள் திருட்டு

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கடையின் பூட்டை உடைத்து சுமாா் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுபட்டி தாமஸ் தெருவை சோ்ந்தவா் அமுல்ராஜ் மகன் ஃபிராங்ளின் (26). இவா் திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் செவலூா் பிரிவு பகுதியில் கால்நடை சந்தை அருகே நடத்திவரும் கைப்பேசி கடையின் கதவு பாதி திறந்திருப்பதாக சனிக்கிழமை காலை தகவல் வந்தது.

இதையடுத்து, ஃபிராங்ளின் சென்று கடையை திறந்துபாா்த்தபோது அங்கு விற்பனைக்கு இருந்த 28 கைப்பேசிகள் மற்றும் அவரின் ஒரு ஐ-போன் என மொத்தம் சுமாா் 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.