வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி- பிரதிப் படம்
Updated On :4 பிப்ரவரி 2026, 11:21 pm

போடி அருகே இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை நடுக் குடியிருப்பைச் சோ்ந்த கதிா்வேல் மகன் முத்துக்குமாா் (36). கட்டடத் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் ராசிங்காபுரத்திலிருந்து ஒண்டிவீரப்பசாமி கோயிலுக்கு செல்லும் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...