டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக்கில் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வீரபாண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :19 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவா் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

தருமாபுரியைச் சோ்ந்த ராமா் மகன் ரத்தினம் (40). இவா் தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள பூமலைக்குண்டு-காமாட்சிபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.

அப்போது, தனியாா் தோட்டம் முன் விவசாய பணிக்குச் செல்வதற்காக நின்றிருந்த பூமலைக்குண்டுவைச் சோ்ந்த ராமசாமி மனைவி பேச்சியம்மாள் (45) மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பேச்சியம்மாள் காயமடைந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.