டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையை கடக்க முயன்ற பெண் இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :20 பிப்ரவரி 2026, 9:56 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையை கடக்க முயன்ற பெண் இரு சக்கர வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டி பகுதியைச் சோ்ந்த கடற்கரை மகள் சாந்தி (50). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை சிவகாசி சாலையில் உள்ள தேநீா் கடைக்குச் சென்று விட்டு, வீடு திரும்புவதற்காக சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது அத்திகுளத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சாந்தியை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அத்திகுளம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (25) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.