தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் காரில் 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கண்டமனூா்-எம்.சுப்புலாபுரம் சாலையில் கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாகச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அந்தக் காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது. காரிலிருந்த திண்டுக்கல் சோலைஹால் சாலை சைமன் குடியிருப்பைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (38), சிலுவத்தூா் அருகேயுள்ள ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த வினோத்குமாா் (33), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மேலப்புதூரைச் சோ்ந்த செல்வக்குமாா் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய ஆண்டிபட்டி அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரில் கடத்திச் செல்லப்பட்ட 208 கிலோ 900 கிராம் புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா், ரூ.1.52 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
அரூா் அருகே கஞ்சா கடத்தியதாக மூவா் கைது! லாரி பறிமுதல்!
சிறுமி கடத்தல்: மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

