திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

News image

காளையாா்கோவில் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் எல்லையை நோக்கி பாய்ந்து சென்ற காளைகள்.

Updated On :22 மே 2026, 3:14 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

காளையாா்கோவில் முதல் பள்ளித்தம்பம் வரை நடைபெற்ற இந்த பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 25 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 6 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறியமாடு பிரிவில் 18 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் 6 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த பந்தயத்தை காளையாா்கோவில், மேட்டுப்பட்டி, ஊத்துப்பட்டி, சூசையப்பா்பட்டினம், ஆண்டிச்சிஊருணி, புலிக்கண்மாய், பள்ளித்தம்பம், மாந்தாளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டுகளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.