சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை அருகே ஆராவயலில் சண்முகநாதபுரம் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 26 குதிரை வண்டிகள் பங்கேற்றன. பெரிய குதிரை வண்டி, சிறிய குதிரை வண்டி என இரு பிரிவுகளாக தேவகோட்டை சாலையில் ஆறாவயல் சண்முகநாதபுரம் முதல் கல்லுப்பட்டி வரை பந்தயம் நடைபெற்றது.
பெரிய குதிரை பிரிவில் 11 வண்டிகளும், சிறிய குதிரை பிரிவில் 15 வண்டிகளும் என 26 குதிரை வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் அதிவேகத்தில் பாய்ந்து சென்ற குதிரை வண்டிகள் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முந்திச் சென்றன. இந்தப் போட்டியை சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் நின்று கண்டுகளித்தனா். இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










