தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தனியங்கூட்டம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.

Updated On :17 மே 2026, 1:43 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பந்தயம் கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சின்ன மாடு பந்தயத்தில் 8 மாட்டு வண்டிகளும், பெரிய மாடு பந்தயத்தில் 6-ம் , தேன்சிட்டு பந்தயத்தில் 10-ம், பூஞ்சிட்டு பந்தயத்தில் 21-ம் என மொத்தம் 45 மாட்டு வண்டிகளும், சாரதிகளும் பங்கேற்றனா்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.