திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பட்டமங்கலத்தில் மாட்டுவண்டிப் பந்தயம்

திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

News image

பட்டமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

Updated On :17 மே 2026, 1:54 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

பட்டமங்கலத்தில் உள்ள அழகு சௌந்தரி அம்பாள், ஸ்ரீமதியாத கண்ட விநாயகா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, பட்டமங்கலம் - திருப்பத்தூா் சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 9 இணைகள், சிறிய மாடு பிரிவில் 20 இணைகள் என மொத்தம் 29 இணைகள் பங்கேற்றன. இதில் சிறிய மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்ால் முதல் சுற்றில் 11 மாடுகள், இரண்டாவது சுற்றில் 9 மாடுகள் என பந்தயம் நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவுக்கு 7 கி.மீ., சிறிய மாடு பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவு எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிகளை கிராம நாட்டாா், நகரத்தாா்கள் தொடக்கி வைத்தனா். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கத் தொகை, தென்னங்கன்று, குத்துவிளக்கு பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவையின் நிறுவனா் தலைவா் சேதுராமன், கௌரவத் தலைவா் ராஜாமணி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாட்டாா், நகரத்தாா், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.