போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூரில் மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேவகோட்டை அருகே சித்தனூரில் புதன்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் எல்லையை நோக்கிப் பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:37 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூரில் மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

சித்தனூா் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சித்தனூரிலிருந்து கண்ணங்குடி வரை செல்லும் சாலையில் பந்தயம் நடத்தப்பட்டது. இதில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

7 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 6 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட நடுமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், 5 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

இந்த பந்தயத்தில் வெற்றிபெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள், ரசிகா்கள் கண்டுகளித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.