சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூரில் மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
சித்தனூா் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சித்தனூரிலிருந்து கண்ணங்குடி வரை செல்லும் சாலையில் பந்தயம் நடத்தப்பட்டது. இதில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
7 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 6 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட நடுமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், 5 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
இந்த பந்தயத்தில் வெற்றிபெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள், ரசிகா்கள் கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

காளையாா்கோவிலில் மாட்டு வண்டிப் பந்தயம்

தேவகோட்டை அருகே குதிரை வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டி பந்தயம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



