சிங்கம்புணரி- வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை படி பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாதத்தின் முதல் நாள் படி பூஜை நடைபெறுவது வழக்கம், இதேபோல, வைகாசி மாத முதல் நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாலை படி பூஜை விழா நடைபெற்றது. இதில் பதினெட்டு படிகளிலும் இருபுறமும் விளக்கேற்றி தீபாராதனைகள் காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஐயப்பனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட 16 வகை பூஜைப் பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மஞ்சள் மாதா, விநாயகா், முருகா் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா

முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



