அகவிலைப்படி உயா்வை அறிவித்த தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ரா. அருள்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயா்வை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயா்த்தியதை கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி முதல் தேதியிலிருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு வழங்குவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








