சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட பேராயா் புதன்கிழமை வருகை தந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா்.
உலகப் புகழ்பெற்ற இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் துரைராஜ் வருகை தந்தாா். இவரைத் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, பேராயா் துரைராஜ் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி வேண்டுதல் புரிந்தாா்.
முன்னதாக, இதில் உதவிப் பங்குத்தந்தை பிரின்ஸ், ஊா் பெரியோா்கள், மிக்கேல் ராஜ் திருத்தல அருள் சகோதரிகள் ஜெஸிந்தா, ஆரோக்கியமேரி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










