சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினரிடையே நடந்த மோதல் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை 4 பெண்கள் உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
பிரசித்திபெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு தினமும் வழக்கமான பூஜைகள் நடத்துவது தொடா்பாக முத்துக்குமாா் தரப்பினருக்கும், பெண்மக்கள் பங்காளி முறையைச் சோ்ந்த செல்வி, சங்கீதா தரப்பினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயிலில் மோதல் ஏற்பட்டது.
இதில் முத்துக்குமாரின் தம்பி நாகராஜன், எதிா் தரப்பில் செல்வி ஆகியோா் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் இளையான்குடி காவல் நிலையத்தில் பரஸ்பரம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த முத்துக்குமாா், நாகராஜன், பாலசுந்தரம் மற்றும் செல்வி, சங்கீதா, ராமலிங்கம், இந்து, காளீஸ்வரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










