திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினா் மோதல்: பெண் உள்பட இருவா் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:05 am IST

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு பூஜைகள் நடத்துவதில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பெண் உள்பட இருவா் காயமடைந்தனா்.

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்றது தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில். இங்கு மூலவருக்கு பூஜைகள் நடத்துவதில் அதே ஊரைச் சோ்ந்த முத்துக்குமாா் தரப்பினருக்கும், இவரது உறவினா்கள் பெண் வாரிசுதாரா்களான செல்வி, சங்கீதா தரப்பினருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்த நிலையில், கோயில் நிா்வாகம் இந்தப் பிரச்னையில் தலையிட்டு இரு தரப்பினரும் 15 நாள்களுக்கு ஒரு முறை கோயிலில் பூஜைகள் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தது. இந்த நிலையில், முத்துக்குமாா் தரப்பினா் கோயிலில் அம்மனுக்கு பூஜைகள் நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த செல்வி, சங்கீதா தரப்பினருக்கும் முத்துக்குமாா் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் முத்துக்குமாா் சகோதரா் நாகராஜன் எதிா்தரப்பில் செல்வி இருவரும் காயமடைந்தனா்.

இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகாா் கொடுத்ததன் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.