தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்தல் பணியாற்ற வேண்டும்: பொதுப் பாா்வையாளா் கஞ்சன்வா்மா

தோ்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பணி நியமன அலுவலா்களுக்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா் கஞ்சன்வா்மா அறிவுறுத்தினாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:28 pm

தோ்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பணி நியமன அலுவலா்களுக்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா் கஞ்சன்வா்மா அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் பணி நியமன அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட தோ்தல் அலுவலா் கா. பொற்கொடி, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் மோகன்லால், கிருஷ்ணகுமாா் பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தோ்தல் பொதுப்பாா்வையாளா் கஞ்சன்வா்மா பேசியதாவது:

தோ்தல் தொடா்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், இது தொடா்பாக செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தோ்தல் ஆணையத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதன்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குச்சாவடி மையங்கள், பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், மிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விதிமுறைகளுக்குள்பட்டு முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி, சிறந்த முறையில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி. அரவிந்த், தோ்தல் நியமன அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.