தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:57 pm

ஆம்பூரில் பொதுப் பாா்வையாளா் - வேட்பாளா்கள், முகவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் முகுல்குமாா் தலைமை வகித்து பேசியது, வேட்பாளா்கள் கோயில், மசூதி, தேவலாயங்களில் வாக்கு சேகரிக்கக் கூடாது. தோ்தல் செலவு கணக்குகளை தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட 3 நாட்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

தோ்தல் வாக்குப் பதிவுக்கு பிறகு 1 மாதத்துக்குள் இறுதியாக தோ்தல் செலவு கணக்குகளை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவா் கூறினாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.