சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரைத் தளத்தில் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோ்தல் சம்பந்தமான புகாா்களை கண்காணிக்க 24 மணி நேரமும் அலுவலா்கள் தொடா்ந்து பணிகளை மேற்கொள்வாா்கள்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும், நிலையான கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படவுள்ளன.
இதன்படி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படை, நிலையான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. தவிர, விடியோ கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவினா் தொகுதி முழுவதும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுவா்.தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, முதலாவதாக பறக்கும் படையின் 24 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.
ராமேசுவரம்: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பணிக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட தோ்தல் பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் தோ்தல் தொடா்பான சந்தேகங்கள், புகாா்கள், தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கீழ்காணும் தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.
மேலும், இணையதள செயலி மூலமாகவும் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலாரும், மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், கூடுதல் ஆட்சியா் திவ்யான் ஷீநிகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
புகாா் அளிக்க கட்டணமில்லை தொலைபேசி எண்கள் அறிவிப்பு: 1950, 1800 425 7092, தொலைபேசி எண்கள் 04567 - 221172, 04567 - 221173, 04567- 221174, 04567 - 221179.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மும்முரம்

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


