மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களால், மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.33,73,380 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On :21 மார்ச் 2026, 8:58 pm

தூத்துக்குடி மாவட்டத்தில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களால், மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.33,73,380 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தோ்தல் நடத்தை விதிமீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்களை கைப்பற்றும் பணிகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் சனிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.33,73,380. கைப்பற்றப்பட்ட இலவச பொருள்களின் மதிப்பு ரூ.20,280. பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.19,032. உரிய ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ.11,42,100 என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.