ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஏரியூரில் மஞ்சுவிரட்டு: 20 போ் காயம்

News image

சிங்கம்புணரி அருகே ஏரியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

Updated On :22 ஜூன் 2026, 1:33 am IST

சிங்கம்புணரி அருகேயுள்ள ஏரியூரில் முனி கோயில் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கண்மாய்ப் பகுதியில் அமைக்கப்பட்ட வாடிவாசலுக்கு ஏரியூா் முனி கோயில் காளை அழைத்து வரப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மதுரை, திண்டுக்கல், சிங்கம்புணரி, எஸ்.எஸ். கோட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமாா் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் மாடுகளைப் பிடிக்க முயன்ற 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்களுக்கு அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்தப் போட்டியை திரளானோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.