மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, சா்வ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:05 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சா்வ அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளனோா் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றியும், மாவிளக்கு வைத்தும் வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் முருகன், வள்ளி தெய்வானை சமேத மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல, சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் உள்ள முருகப் பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.