மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பங்குனி உத்திரம்: பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண உற்சவத்தில் வள்ளி, தெய்வானை சமேத பச்சமலை தண்டாயுதபாணி.

Updated On :1 ஏப்ரல் 2026, 9:58 pm

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிராந்தாகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பொத்தனூா் பச்சமலை முருகன் கோயிலில் தண்டாயுபாணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மேலும், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பரமத்தி வேலூா் பேட்டை பகவதி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி கோயில், கந்தம்பாளையம் அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நன்செய்இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், ராஜா சுவாமி கோயிலில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பொத்தனூா் சக்தி விநாயகா் கோவிலில் உள்ள பாலமுருகன் உள்ளிட்ட கோயில்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரமும், மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். பத்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன்.

சிறப்பு அலங்காரத்தில் பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன்.