மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

News image

மானாமதுரை அருகே கால்பிரிவில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:02 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் பால் குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனா். அங்கு உற்சவருக்கு பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். இரவு மயில் வானத்தில் வழிவிடு முருகன் வீதியுலா வருதல் நடைபெற்றது.

இதேபோல, மானாமதுரை அருகேயுள்ள கால் பிரிவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு, பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஏ.ஆா்.பி. முருகேசன் செய்தாா்.

இதேபோல, இடைக்காட்டூா் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, காப்புக்கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் புதன்கிழமை பால் குடம், காவடி எடுத்தும், தீக்குண்டம் இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.