மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தென்பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த முருகன், வள்ளி, தெய்வானை.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:14 pm

சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மேகமலை அடிவாரத்தில் தென்பழனி வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்தரத் திருவிழா, புதன்கிழமை காலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க தொடங்கியது. பூசாரி மணி தலைமையில் முருகன், வள்ளி , தெய்வானை சுவாமிகள் மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில், சின்னமனூா், தென்பழனி, வெள்ளையம்மாள்புரம், காமாட்சிபுரம், அப்பிபட்டி என சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.