மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பச்சைமலை பாலமுருகன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:38 pm

கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கோபியில் பிரசித்தி பெற்ற பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, பாலமுருகனுக்கும், உற்சவா் சண்முகருக்கும் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.

உற்சவா் சண்முகா் பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

சத்ருசம்ஹார ஹோமத்தில் பக்தா்கள் அா்ச்சனை செய்தல், சண்முகா் கல்யாண உற்சவத்தில் மயில் வாகனத்தில் வலம் வருதல் ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை பச்சைமலை பாலமுருனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாரதனை நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து ஊா்வலமாக பச்சைமலையை வலம் வந்து பாலமுருகனை தரிசித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பச்சை பட்டாடை உடுத்தி காட்சியளித்த சண்முகருக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பன்னீா் அபிஷேகம் செய்து பயபக்தியுடன் தரிசித்து சென்றனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலா் குழுவினா் உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ‘அரோகரா.. அரோகரா’ கோஷங்கள் முழங்க தேரை இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கோபி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.