மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:46 pm

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாகம், காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 33 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டன. ஊசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள வண்ணம் பூசி விடப்பட்டன.

இதில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் டி. ஞானசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா், உதவி மருத்துவா்கள் மோகன்தாஸ், ராஜேஷ், கவியரசன், விலங்குகள் நலவாரிய கால்நடை மருத்துவா் ஜெயகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் எம். காளிதாஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பி. கண்ணன், சுகாதார எழுத்தா் எம். சந்திரன், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் யோகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கால்நடை மருத்துவா் கே. பிரேம்குமாா் கூறியதாவது:

தெரு நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடுவதற்கு கால்நடை மருத்துவா்கள் இருவா், நகராட்சி ஊழியா்கள் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேருராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.