போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழா

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தாா்.

News image

இடைச்சியூரணி பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜை.

Updated On :28 மே 2026, 3:57 am IST

கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள இடைச்சியூரணி கிராமத்தில் அமைந்துள்ள பாதாள பேச்சியம்மன், வல்லப்ப கணபதி, இருளப்ப சுவாமி, மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து, அக்னிச் சட்டி எடுத்து முக்கியத் தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்து பாதாள பேச்சியம்மன், இருளப்ப சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.