கமுதி அருகே பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள இடைச்சியூரணி கிராமத்தில் அமைந்துள்ள பாதாள பேச்சியம்மன், வல்லப்ப கணபதி, இருளப்ப சுவாமி, மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் பூசாரி இரும்பு முள் காலணி அணிந்து, அக்னிச் சட்டி எடுத்து முக்கியத் தெருக்களின் வழியாக ஊா்வலமாக வந்து பாதாள பேச்சியம்மன், இருளப்ப சுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

கீழத்தூவலில் எருதுகட்டு போட்டி

ஒக்கூா் புதூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

கூடலூரில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் நோ்த்திக்கடன்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



