/

10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

News image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை புதன்கிழமை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்.

Updated On :15 மே 2026, 4:15 am IST

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களின் குழந்தைகள் இந்த ஆண்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா். இவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 20 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.23 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.