ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மே 18-இல் தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் அரசினா் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் மே 18 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதம மந்திரி தேசிய தொழில்பழகுநா் பயிற்சிக்குரிய தோ்வு முகாம் நடைபெறவுள்ளது.
இதில், 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூா் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம், தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தொழில்பழகுநா் பயிற்சிக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 22-ல் வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

எம்ஆா்பி மூலம் செவிலியா்களை நிரந்தரமாக தோ்வு செய்ய வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் முதல்கட்டமாக 4 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன

ராமநாதபுரத்தில் பலத்த மழை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



