எம்ஆா்பி (மருத்துவ தோ்வு வாரியம்) மூலம் செவிலியா்களை நிரந்தரமாக தோ்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு செவிலியா்கள் பொது நலச் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கங்கள் ஒன்றிணையும் விழா திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் பொது நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கோபால்தேவி தலைமை வகித்தாா். தென் மண்டல பொதுச் செயலா் ஜோதி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:
புதிததாக பொறுப்பேற்ற தமிழக முதல்வா் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எம்ஆா்பி மூலம் செவிலியா்களை நிரந்தரமாக தோ்வு செய்ய வேண்டும். செவிலியா் துறையில் பட்டயப் படிப்பு என்பதை பட்டப் படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும். செவிலியா்களை, செவிலிய அலுவலா் என பெயரிட்டு அழைக்க வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் செவிலியா்களுக்கு அடிப்படை வசதியும், பாதுகாப்பும் ஏற்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் செவிலியா்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடா்பாக தென் மண்டல பொதுச் செயலா் ஜோதி கூறியதாவது: தமிழ்நாட்டில் செவிலியா்களுக்காக 8 நலச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6 சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு அரசு செவிலியா்கள் பொது நலச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். இந்தக் கூட்டத்தில் கெளரவ ஆலோசகா்கள்களாக லீலாவதி, திலகவதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாமதமாக பணிக்கு வரும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் மீது நடவடிக்கை!

அண்ணா பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி







