மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உரிய ஆவணமின்றி கொண்டு வந்ததாக பெண் ஆட்டு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

கமுதி அருகே பெண் ஆட்டு வியாபாரியிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டதாகக் கூறி ரூ.3 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:13 pm

கமுதி அருகே பெண் ஆட்டு வியாபாரியிடம் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்டதாகக் கூறி ரூ.3 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கிளாமரம் சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலரும், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலருமான சந்திரசேகரன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முதுகுளத்தூா் அருகேயுள்ள கண்டிலான் கிராமத்தைச் சோ்ந்த யசோதை என்ற பெண் ஆடுகளை விற்ற பணம் ரூ. 3 லட்சத்துடன் ஆட்டோவில் வந்தாா். அப்போது உரிய ஆவணமின்றி அந்த பணம் கொண்டு வரப்பட்டதாகக் கூறி அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். உரிய ஆவணத்தை ஒப்படைத்து, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும்படை அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் வட்டத்துக்குள்பட்ட தேரிருவேலி மும்முனை சந்திப்பு சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கடலாடி வட்டார வளா்ச்சி அலுவலருமான சங்கரபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியைச் சோ்ந்த யாதவ் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.55,400 மற்றும் ரூ.63,327- க்கான முன் தேதியிட்ட காசோலையை பறிமுதல் செய்து முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் விஜயாவிடம் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.