தொண்டி பகுதியில் கடலில் மிதந்து வந்த மா்மப் பொருளை இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள் மீட்டு, திருவனந்தபுரத்துக்கு ஆய்வுக்கு எடுத்து செல்வதாகத் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சோழியக்குடி, தொண்டிக்கு இடையே சுமாா் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மா்மப் பொருள் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
இந்தப் பொருளை ஜிபிஆா்எஸ் மூலம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில் இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள், அங்கு புதன்கிழமை வந்து திருப்பாலைகுடி, தேவிபட்டினம் இடையே கடலில் மிதந்து கொண்டிருந்த எரிவாயு உருளை போன்ற அந்தப் பொருளைப் பாதுகாப்பாக மீட்டு எடுத்துச் சென்றனா்.
இது ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிஹோட்டா வில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி இந்தியா ஏவிய பிஎஸ்எல்வி சி.62 மிஷனின் போது வெடித்துச் சிதறிய பகுதி என்றும், இதன் எடை 600 கிலோ என இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.
கடந்த சில நாள்களாக இது ஏவுகணையா அல்லது எரிபொருள் கலனா என்ற சந்தேகத்தில் அச்சத்துடன் கடலுக்குச் சென்று வந்த மீனவா்கள், தற்போது அந்தப் பொருள் மீட்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனா்.

தொடர்புடையது

100 % வாக்குப் பதிவு: தண்ணீரில் மிதந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு

தொண்டி கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் மீட்பு

தொண்டி அருகே கடலில் மிதந்த மா்மப் பொருள் - போலீஸாா் எச்சரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


