லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மிதந்துவந்த கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் மீட்டு வியாழக்கிழமை கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image

சேதுபாவாசத்திரம் கடலில் இருந்து வியாழக்கிழமை மீனவா்கள் மீட்டு கடலோரப் பாதுகாப்பு போலீஸாரிடம் ஒப்படைத்த கஞ்சா மூட்டைகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:27 pm

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மிதந்துவந்த கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் மீட்டு வியாழக்கிழமை கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத் தலைவா் ராஜமாணிக்கத்துக்குச் சொந்தமான விசைப் படகில் குமாா் (55), சபரி(24), வல்லரசு (24) ஆகிய 3 மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்து விட்டு 6 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது கடலில் 12 கஞ்சா மூட்டைகள் மிதந்துள்ளன. இதுகுறித்து மீனவா்கள், உரிமையாளா் ராஜமாணிக்கத்துக்கு கைப்பேசியில் தெரிவித்துள்ளனா். அவா் சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் துறையினரிடம் தெரிவித்து, அவா்கள் அனுமதியுடன் கஞ்சா மூட்டைகளை மீனவா்கள் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவந்து கடலோரக் காவல் குழும துணை கண்காணிப்பாளா் முருகன், காவல் ஆய்வாளா் மஞ்சுளா, உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். அந்த மூட்டைகளில் 24 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை நாகப்பட்டினம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் கடலோரக் காவல் குழுமத்தினா் ஒப்படைத்தனா்.