திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டியை ரோந்து பணியில் இருந்த போலீஸாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களும் பத்திரமாக மீட்டனா்.
கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி (59). இவா் சனிக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தாராம். இரவு நேரத்தில் இவா், கடலில் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாராம்.
அதைப் பாா்த்த கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா, இசக்கி, விக்னேஷ், ஆறுமுகநயினாா் மற்றும் கடல் காவல் நிலைய தலைமை காவலா் முத்துமாலை ஆகியோா் உடனடியாக கடலுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டனா்.
முதலுதவி சிகிச்சைக்கு பின், மூதாட்டியை கோயில் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


