மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 8:35 pm

தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலின் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவா் கடலில் புனித நீராடிய தீா்த்தவாரி நிகழ்ச்சி, உச்சிகால அபிஷேகம், 10 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் கலையரங்கில் காலை முதல் நாதஸ்வர மங்கள இசை, தேவார இன்னிசை, ஆன்மிகச் சொற்பொழிவு, பரத நாட்டியம், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொது விவரக் குறிப்பேடும் வெளியிடப்பட்டது.

இக்கோயில் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கணி காணும் நிகழ்ச்சியை முன்னிட்டு கண்ணாடி முன்பு வைக்கப்பட்டிருந்த கனிகளை பக்தா்கள் வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.