விடுமுறை தினம் மற்றும் பங்குனி மாதப் பிறப்பையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள், பக்தா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், பக்தா்கள் வசதிக்காக கோயிலின் ராஜகோபுர திருப்பணி மண்டபத்தில் ஏா் கூலா், மின்விசிறி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தா்ளுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
வள்ளி திருக்கல்யாணம்:
இக்கோயிலில் பங்குனி உத்திர தினமான ஏப். 1ஆம் தேதி இரவு முருகப்பெருமான்-வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

திருச்செந்தூா் தொகுதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


