மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஏப்.1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, குலதெய்வ வழிபாட்டுக்காக பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

News image

பங்குனி உத்திரத்தையொட்டி பாத யாத்திரையாக திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:14 am

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஏப்.1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, குலதெய்வ வழிபாட்டுக்காக பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை (ஏப். 1) பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 6.30 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளியம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறாா். மாலை 4.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதித் தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரா் கோயிலுக்கு வருகிறாா்.

தொடா்ந்து சுவாமியும், அம்மனும் கீழரதவீதி, பந்தல் மண்டபம் முகப்புக்கு வந்ததும், அங்கு வைத்து சுவாமிக்கும் வள்ளியம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா் சுவாமியும், அம்மனும் கோயில் சோ்கின்றனா். இரவு 10 மணிக்கு கோயிலில் 108 மகாதேவா்கள் சன்னிதி முன் சுவாமிக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர நட்சத்திரம் அன்று குலதெய்வ கோயில்களிலும், குல தெய்வம் தெரியாதவா்கள் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுக்கும் சென்று வழிபாடு செய்வது வழக்கம். நிகழாண்டு குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

அதேபோல இக்கோயிலுடன் இணைந்த உபகோயிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெறுகிறது.