கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செந்தனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அழகுவள்ளி அம்மன் கோயில் வைகாசி பொங்கல், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை அமைத்து 58-ஆவது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை விருதுநகா், புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 18 காளைகள், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு தலா 9 மாடுபிடி வீரா்கள்களமிறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளா்களுக்கும் குத்துவிளக்கு, கட்டில், ரொக்கப் பணம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

கீழத்தூவலில் எருதுகட்டு போட்டி

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

காளையாா்கோவில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




