போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகே புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :28 மே 2026, 3:48 am IST

கமுதி அருகே புதுக்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள புதுக்கோட்டை நிறைகுளத்துஅய்யனாா், அழகு வள்ளியம்மன், முப்பிடாரியம்மன், கண்ணபிரான், வீரியகாளியம்மன் கோயில் திருவிழா, பசும்பொன் தேவா் சிலை நிறுவிய 34-ஆவது குருபூஜை விழா ஆகியவற்றை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கடந்த மே 19-ஆம் தேதி காப்பு கட்டுதல், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் இந்தக் கோயில் திருவிழா தொடங்கியது. 24-ஆம் தேதி கபடிப் போட்டி, 25-ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 26-ஆம் தேதி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 13 காளைகள், 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். தலா ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் அடங்க மறுத்த காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், ரொக்கம், கட்டில், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது. மாலை செல்வ விநாயகா் கோயிலில் இருந்து வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று, கண்மாயில் கரைத்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை, புதுக்கோட்டை கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.