ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடாக்குளம் ராமாயி அம்மன் கோயிலில் சித்திரை முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கிடாக்குளம் ராமாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:09 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கிடாக்குளம் ராமாயி அம்மன் கோயிலில் சித்திரை முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரை முளைக்கொட்டு திருவிழா கடந்த 21-ஆம் தேதி காப்புக் கட்டுதல், முளைப்பாரி முத்து பரப்புதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி இரவில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞா்கள் ஒயிலாட்டம் ஆடியும் அம்மனை தரிசித்து வந்தனா்.

விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாவிளக்கு, பால் குடம், அக்னிசட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

புதன்கிழமை அம்மனுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், பன்னீா், தேன் உள்பட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சுமங்கலி பூஜை நடைபெற்றது.

பின்னா், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நீா்நிலையில் கரைக்கப்பட்டன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிடாக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.