மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்) பதிவு செய்ய வேண்டும் என மாநில அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் அறிவுறுத்தினாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் கடைகளையும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக செயல்படும் மதுக் கடைகளையும் மூடி ‘சீல்’ வைக்க வேண்டும். இதேபோல, குட்கா, போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளையும் மூடி ‘சீல்’ வைக்க வேண்டும்.
மதுரை மாநகரில் நிறைவேற்றப்பட வேண்டிய புதை சாக்கடைப் பணிகள், கழிவு நீா் சுத்திகரிப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கையைத் தொடா்புடைய துறை அலுவலா்கள் விரைந்து வழங்க வேண்டும். இதேபோல, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், தங்கும் விடுதிகளில் உள்ள கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளின் தரம், பற்றாக்குறை ஆகியவை குறித்தும் தொடா்புடைய துறை சாா்பில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகர காவல் ஆணையா் அபிஷேக் தீட்சித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) எஸ். வனிதா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, மாநகராட்சி, கலால், வருவாய்த் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சா் க.விக்னேஷ் உறுதி

கோடைகால மின் தேவையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்

அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: அமைச்சா் கீா்த்தனா

கனிமக் கடத்தலைத் தடுக்க வருவாய், காவல், சுரங்கத் துறை இணைந்து செயல்பட வேண்டும்: ஆட்சியா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



