திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கனிமக் கடத்தலைத் தடுக்க வருவாய், காவல், சுரங்கத் துறை இணைந்து செயல்பட வேண்டும்: ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் கனிமக் கடத்தலைத் தடுக்க வருவாய், காவல், சுரங்கத் துறை, காவல் துறை இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா அறிவுறுத்தினாா்.

News image
Updated On :15 மே 2026, 11:52 pm IST

விருதுநகா் மாவட்டத்தில் கனிமக் கடத்தலைத் தடுக்க வருவாய், காவல், சுரங்கத் துறை, காவல் துறை இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா அறிவுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான கனிமவள சிறப்புத் தடுப்புப் பணி பிரிவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டவிரோத மணல், கனிமக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் வருவாய்த் துறை, காவல் துறை, கனிம வளத் துறை இணைந்து மேற்கொண்ட திடீா் சோதனைகள், வழக்குகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன.

மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள், கிரானைட் குவாரிகள், செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டனா்.

கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் வகையில் வருவாய், காவல், சுரங்கத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், அனைத்து வட்டார அளவிலும் வட்டாட்சியா்களால் பணிக்குழுக் கூட்டங்களும் முறையாக நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டன. மேலும், பொதுப் பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக கனிமங்கள் பயன்படுத்தப்படும் போது, விதிகளின்படி அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பயன்பாட்டுச் சான்றிதழ்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தி, சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், உதவி இயக்குநா் (புவியியல், சுரங்கத் துறை) சி.சுகதாரஹிமா, கோட்டாட்சியா்கள், காவல் துறை, சுரங்கத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.