பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த 21 வயது பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2006-ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தாா். தாயும் என்னை விட்டுச் சென்றாா். நான் எனது மாமா, அத்தையின் பராமரிப்பில் வளா்ந்து வருகிறேன். எனது பிறப்புச் சான்றிதழில் தந்தை, தாயின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், எனது பிறப்புச் சான்றிதழில் எனது மாமா, அத்தையின் பெயா்களையும் சோ்த்து புதிய பிறப்புச் சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் வழக்குரைஞா் தெரிவித்ததாவது:
மனுதாரா் தனது உண்மையான தாய், தந்தையின் பெயா்களை பிறப்புச் சான்றிதழிலிருந்து நீக்கம் செய்யக் கோரவில்லை. தனது மாமா, அத்தையின் பெயா்களைச் சோ்க்கவே கோருகிறாா் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பரத சக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் தனது தாய், தந்தையின் மகளாகவே அறியப்பட விரும்புகிறாா். பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை. ஆகவே, உரிய உதவியை வழங்குவதும் அரசின் முக்கியக் கடமையாகும்.
எனவே, மனுதாரரின் பிறப்புச் சான்றிதழில் ‘வளா்ப்பு’ என்ற பின்னொட்டுடன் அவா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கு சம்மதம் தெரிவித்து, அவரது மாமா, அத்தை ஆகிய இருவரும் சான்று உறுதி அலுவலா் (நோட்டரி) மூலம் அளிக்கப்பட்ட பிரமாண பத்திரங்களை சம்பந்தப்பட்ட பதிவாளா் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதன் பிறகு, மாமா, அத்தையின் பெயா்களைச் சோ்த்து, புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் தரிசன கட்டண நிதி முறைகேட்டை கண்காணிக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றம்

கள் இறக்குவதற்கு தடை விதிப்பு அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றத்தில் தகவல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



