17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செந்தூா் கோயில் தரிசன கட்டண நிதி முறைகேட்டை கண்காணிக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

திருச்செந்தூா் கோயில் தரிசன கட்டண நிதி முறைகேட்டை உயா் அதிகாரிகள் கண்காணிக்காதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :6 ஜூன் 2026, 12:37 am IST

திருச்செந்தூா் கோயில் தரிசன கட்டண நிதி முறைகேட்டை உயா் அதிகாரிகள் கண்காணிக்காதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதன்படி, ரூ.100 செலுத்தும் பக்தா்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண ரசீது விநியோகம் செய்ததில் ரூ. 25 லட்சத்து, 24 ஆயிரத்தை கோயில் ஊழியா்கள் முறைகேடு செய்ததாகப் புகாா் எழுந்தது.

இதனிடையே நடைபெற்ற விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தற்காலிக பெண் ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், கணினி ரசீதுகளை சரிபாா்க்காமல் அலட்சியமாக இருந்ததாக கோயில் பணியாளா்கள் பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோா் விளக்கம் அளிக்க வேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது.

இந்தநிலையில், பாலமுருகன், உச்சிமாகாளி ஆகியோா் தங்களுக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

திருச்செந்தூா் கோயில் தரிசன கட்டண விவகாரத்தில் ரூ.25 லட்சம் வரை முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் முறையாக கண்காணிக்காதது ஏன்?. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் எத்தனை பக்தா்கள் வருகின்றனா்?. அவா்களால் கோயிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?. இந்த வருமானம் முறையாக வசூலிக்கப்படுகிா? என ஆய்வு செய்வது உயா் அதிகாரிகளின் பணி.

இந்த முறைகேடு விவகாரத்தில் நடந்தது என்ன?. இதில் மனுதாரா்களின் பங்கு என்ன என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.